Wednesday, August 7, 2019

புதுச்சேரியில் பள்ளிகள் துவங்கி மூன்று மாதங்களாகியும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய புத்தகம், சீறுடை வழங்காததை கண்டித்து மாணவர்கள் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்



புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச சீருடையும், குறிப்பிட்ட சில பாடங்களுக்கான புத்தகம் வழங்கவில்லை  இதனை கண்டித்து புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள நாவலர் நெடுஞ்செழியன் அரசுப்பள்ளியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து 100அடி சாலையில் உள்ள கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கல்வித்துறை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இலவச புத்தகம் மற்றும் சீருடைகளை உடனே வழங்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கல்வித்துறை இயக்குனர் ஒரு வார காலத்திற்குள் இலவச சீருடை மற்றும் புத்தகம் வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment