Tuesday, August 6, 2019

புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் நீர் விளையாட்டு பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்க கோரி சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக நீர்விளையாட்டு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வாங்காத நிலையில் பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சித் தலைமை அலுவலகத்தில் இயக்குனர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இயக்குனரை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். தகவலறிந்து வந்த பெரிய கடை காவல் ஆய்வாளர் செந்தில்குமரன் ஊழியரிடம் பேச்சுவார்த்தை செய்து அப்புறப்படுத்தினர்

No comments:

Post a Comment