புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை மாதம் தோறும்
பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா பாவேந்தர் பாரதிதாசனார் அரசு அருங்காட்சியகத்தில்
நடைபெற்று வருகிறது இந்த மாதத்திற்கான விழா விடுதலைப் படைப்புகளும் பாவேந்தரும் என்ற தலைப்பில் கவியரங்கம்
நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் கலைமாமணி முனைவர் கோ பாரதி தலைமை
தாங்கி தலைமை உரை ஆற்றினார் மேலும் இந்நிகழ்ச்சியில் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ்
கல்பாக்கம் அணுமின் நிலைய அதிகாரி கவிஞர் வெற்றிவேந்தன் வாழ்த்துரை வழங்கினார்
மாணவிகள் பல்வேறு தேச தலைவர்கள் பற்றி சிறப்புரை ஆற்றினர் தேன்மொழி நன்றியுரை
ஆற்றினார் இதில் தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment