வெப்பச்சலனம் மற்றும் வானிலை மாற்றம் காரணமாக
கடந்த சில நாட்களாகவே நகர மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்வதால் மாலை
வேளையில் இதமான காற்றும் வீசி வருகிறது மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் வளிமண்டல
மேலடுக்கு சுழற்சி யில் ஏற்பட்டுள்ள காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்யும் என
அறிவித்திருந்தது அதன்படி சம்பவத்தன்று மாலை திடீரென பலத்த சூறை காற்றுடன் மழை
பெய்யத்துவங்கியது இதனால் வாகன ஓட்டிகளும் பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவ
மாணவிகளும் அவதிக்கு ஆளாகினர்.
இந்நிலையில் வில்லியனூர் ஐ அடுத்துள்ள தமிழக
பகுதியான கண்டமங்கலம் நவமால் மருதூர் பெருமாள் கோயில் வீதி அருகே காணப்பட்ட மரம்
ஒன்று வேகம் காரணமாக சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது இதனால் அப்பகுதியில்
போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல்
தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் அப்பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர்
தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் தாங்களாகவே முன் வந்து மரத்தை வெட்டி
அப்புறப்படுத்தினர் கேரளா பகுதியில் சாலை போக்குவரத்து சீரானது இளைஞர்களின் இந்த
செயல் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது




No comments:
Post a Comment