Wednesday, August 7, 2019

நகரப்பகுதியில் உள்ள வீடுகளில் மர்ம நபர்கள் பொம்மை வினோத குறியீடு வரைந்த சமப்வத்தை தொடர்ந்து குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டும், வினோத குறியீடு வரைந்த குற்றவாளிகளை கண்டறியும் வகையில் ரெயின்போ நகர் பகுதியில் அப்பகுதி மக்கள் 4 சிசிடிவி கேமிராக்களை பொருத்தியுள்ளனர்.



புதுச்சேரி நகரப்பகுதியான சாரம் பகுதியில் சுமார் 10 வீடுகளில் மனித பொம்மை வரைந்த நிலையில் வினோத குறியீடு இருந்தது. இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், கொள்ளை அடிப்பதற்காக வடமாநில கும்பல் அடையாளம் காட்டுவதற்கு வரைந்ததாக எண்ணி அச்சம் அடைந்தனர். காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இந்நிலையில் புதுச்சேரி நகர பகுதியில் உள்ள ரெயின்போ நகர் பகுதி மக்கள், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்கும், குற்றவாளிகளை எளிதாக கண்டுபிடிப்பதற்காக 4 சிசிடிவி கேமராக்களை தங்களது பகுதியில் அமைத்துள்ளனர். இதை கிழக்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் மாறன் திறந்து வைத்து, செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதே போல் அனைத்து மக்களுக்கு சிசிடிவி கேமராக்களை வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்த முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர் வினோத் மற்றும் அப்பகுதி மக்கள் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment