Tuesday, August 6, 2019

ஏழாவது ஊதியக்குழு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் எதிரே அங்கன்வாடி ஓய்வுபெற்ற ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.



அங்கன்வாடியில் பணிகளை செய்து பின்னர் மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற பணி ஓய்வு பெறுகின்ற பணியாளர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் நிலுவையில் உள்ள ஏழாவது ஊதியக்குழு தொகையினை குறிப்பிட்ட காலத்தில் வழங்க வேண்டும் ஓய்வு பெற்ற அனைத்து அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் முன்பு அங்கன்வாடி ஓய்வுப் பெற்ற ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் சம்மேளன நிர்வாகிகள் தலைமை தாங்கினர் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் சுமார் 50க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

No comments:

Post a Comment