புதுச்சேரி
ரெயின்போ நகர் பகுதியில் தூய ஜான்மரி வியான்னி ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் ஆண்டு
பெருவிழாவையொட்டி கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
விழாவையொட்டி தினமும் காலையில் சிறப்பு ஆராதனையும் மாலையில் சிறிய தேர் பவனியும்
திருப்பலியும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனியில் சிறப்பு விருந்தினராக
சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் மாநில முன்னாள் பேராயர் சின்னப்பா ஆலய பங்குதந்தை
தோமனிக் ரொசாரியோ ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து
பக்தர்கள் தேர்ரை வடம்பிடித்து இழுத்து பிரார்த்தனை செய்தனர். இதில் பாராளுமன்ற
உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் காங்கிரஸ் கட்சி சிறப்பு அழைப்பாளர் வினோத்
உட்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.....

No comments:
Post a Comment