Sunday, August 4, 2019

முறையாக செயல்படும் விவசாயிகளுக்கு கடனுதவி செய்ய தயாராக இருக்கிறோம் பாரதியார் கிராம வங்கி தலைவர்....




பாகூர் அடுத்த குருவிநத்தம் கிராமத்தில் நபார்டு வங்கி மற்றும்  புதுவை பாரதியார் கிராம வங்கி ஆதரவுடன் உழவர் மன்றம் சார்பில் சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம் தொடக்க  நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்;ச்சிக்கு உழவர் மன்ற தலைவர் லட்சுமிநாராயணன் தலமை தாங்கினார். பாகூர் கிளை வங்;கி மேலாளர் ஆனந்தராஜன் முன்னிலை வகித்தார்.  செயலாளர் கெஜவர்தன் வரவேற்றார்.  சிறப்பு விருந்தினராக புதுவை பாரதியார் கிராம வங்கி மாநில தலைவர் மார்க்ரட் ரீட்டா, நபார்டு வங்கியின் உதவி பொதுமேலாளர் உமாகுருமூர்த்தி ஆகியோர்கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்  திட்டங்களை பற்றி எடுத்து கூறினார். மெலும் உழவர் மன்றம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிக்கும் விதமாக சுற்றுசூழல்  விழிப்புணர்வு இயக்கம் முதல் முறையாக விவசாயிகள் தொடங்கப்பட்டதிற்கு பாராட்டினர்.   நிகழ்ச்சியில் பாரதியார் வங்கி தலைவர் மார்கரட்ரீட்டா பேசுகையில், குருவிநத்தம் உழவர் மன்றம் புதுச்சேரியிலே சிறப்பாக இயங்கி வருகிறது.  இதுபோன்று செயல்படும் விவசாயிகளுக்கு தேவையான கடனுதவி உடனுக்குடன் தங்கள் வங்கி வழங்கி வருகிறது. கிசான் கார்டு மூலம் பயிர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. முறையாக கடன் செலுத்தும் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் 3 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.  முறையாக செயல்படும் விவசாயிகளுக்கு கடனுதவி செய்ய தயாராக இருக்கிறோம். கறவை மாடுகளுக்கான கடன் மானியத்துடன் வழங்கி வருகிறோம். உழவர் மன்றங்களுக்கு அறுவடை இயந்திரங்கள் வாங்க கடனுதவி வழங்க ஏற்பாடு செய்யபடும் என தெரிவித்தார்.  தொடர்ந்து உழவர் மன்றம் ஏற்பாடு செய்து இருந்த துணி பைகளை வீடு விடாக வழங்கப்பட்ட��

No comments:

Post a Comment