Tuesday, August 6, 2019

முன்னாள் முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி புதுச்சேரி கூட்டுறவு நகர வங்கி சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கினார்கள்



புதுச்சேரி முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் என் என் ஆர் காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்படி புதுச்சேரி கூட்டுறவு நகர வங்கி ஊழியர்கள் ஜனநாயக சங்கம் சார்பில் நேரு வீதியில் உள்ள கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சங்கத்தின் கௌரவத் தலைவர் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார் இதில் கூட்டுறவு நகர வங்கி சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்


No comments:

Post a Comment