Wednesday, August 7, 2019

பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக நவமான மருதூர் பகுதியில் சாலையின் நடுவே விழுந்த மரத்தை அப்பகுதி இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றிய சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது



வெப்பச்சலனம் மற்றும் வானிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாகவே நகர மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்வதால் மாலை வேளையில் இதமான காற்றும் வீசி வருகிறது மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி யில் ஏற்பட்டுள்ள காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்யும் என அறிவித்திருந்தது அதன்படி சம்பவத்தன்று மாலை திடீரென பலத்த சூறை காற்றுடன் மழை பெய்யத்துவங்கியது இதனால் வாகன ஓட்டிகளும் பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவ மாணவிகளும் அவதிக்கு ஆளாகினர்.

இந்நிலையில் வில்லியனூர் ஐ அடுத்துள்ள தமிழக பகுதியான கண்டமங்கலம் நவமால் மருதூர் பெருமாள் கோயில் வீதி அருகே காணப்பட்ட மரம் ஒன்று வேகம் காரணமாக சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் அப்பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் தாங்களாகவே முன் வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர் கேரளா பகுதியில் சாலை போக்குவரத்து சீரானது இளைஞர்களின் இந்த செயல் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது

நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 168-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


புதுச்சேரி நெல்லித்தோப்பில் பழமைவாய்ந்த புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 168-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. கொடியேற்றத்தையெயாட்டி இன்று காலை ஆலயத்தில்  பங்குத்தந்தை வின்சென்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் செபமாலை நடைபெற்றது. 


பின்னர் உயர் மறைமாவட்ட முதன்மைகுரு அருளானந்ததம் தலைமையில் ஆண்டு பெருவிழா கொடிக்கு சிறப்பு பிரார்ததனைகள் செயய்யப்பட்டு கொடி ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. பின்னர் பேராலயத்தின் எதிரே உள்ள கொடி மரத்தில் ஆண்டு பெருவிழா கொடி ஏற்றப்பட்டது. அப்போது கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ பாடல்களை பாடி ஜெயம் செய்தனர். 


இதில் டெல்லி சிறப்பு பிரதிநிதின ஜான்குமார் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தினந்தோறும் நவ நாட்களில் காலை மாலை என இரு வேலைகளிலும் சிறப்பு திருப்பலிகள் மற்றும் சிறிய தேர்பவனிகள் நடைபெற உள்ளன. ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி வருகிற வருகிற 15-ம் தேதி நடைபெற உள்ளது. பின்னர் கொடியிறக்கம் நடைபெறும். ஆண்டு பெருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்குப்பேரவை குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

ஆனந்த முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி சாமி வீதி உலா நடைபெற்றது.



நெல்லித்தோப்பு தொகுதிக்குட்டபட்ட பிள்ளைதோட்டம் பகுதியில் ஸ்ரீ ஆனந்த முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக சமூக சேவகர் தண்டபாணி ஏற்பாட்டின் பேரில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது பின்பு சுவாமி வீதிஉலா நடந்தது.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நேரு உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்


புதுச்சேரியில் பள்ளிகள் துவங்கி மூன்று மாதங்களாகியும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய புத்தகம், சீறுடை வழங்காததை கண்டித்து மாணவர்கள் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்



புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச சீருடையும், குறிப்பிட்ட சில பாடங்களுக்கான புத்தகம் வழங்கவில்லை  இதனை கண்டித்து புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள நாவலர் நெடுஞ்செழியன் அரசுப்பள்ளியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து 100அடி சாலையில் உள்ள கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கல்வித்துறை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இலவச புத்தகம் மற்றும் சீருடைகளை உடனே வழங்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கல்வித்துறை இயக்குனர் ஒரு வார காலத்திற்குள் இலவச சீருடை மற்றும் புத்தகம் வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

வெப்பச்சலனம் காரணமாக புதுச்சேரியின் நகர மற்றும் கிராம பகுதிகளில் அரை மணிநேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்ததன் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் புதுச்சேரியின் நகரப்பகுதிகள்  மற்றும் கிராம பகுதிளான, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மூலக்குளம், தவளக்குப்பம், காலாப்பட்டு கரிக்கலாம்பாக்கம், தவளகுப்பம் திருபுவனை, வில்லியனூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் அரை  மணிநேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய  பரவலான மழை பெய்தது. 


புதுச்சேரியில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த  நிலையில் பரவலாக பெய்த  மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் தணிந்து  குளர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.மேலும் பரவலான மழையின் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நகரப்பகுதியில் உள்ள வீடுகளில் மர்ம நபர்கள் பொம்மை வினோத குறியீடு வரைந்த சமப்வத்தை தொடர்ந்து குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டும், வினோத குறியீடு வரைந்த குற்றவாளிகளை கண்டறியும் வகையில் ரெயின்போ நகர் பகுதியில் அப்பகுதி மக்கள் 4 சிசிடிவி கேமிராக்களை பொருத்தியுள்ளனர்.



புதுச்சேரி நகரப்பகுதியான சாரம் பகுதியில் சுமார் 10 வீடுகளில் மனித பொம்மை வரைந்த நிலையில் வினோத குறியீடு இருந்தது. இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், கொள்ளை அடிப்பதற்காக வடமாநில கும்பல் அடையாளம் காட்டுவதற்கு வரைந்ததாக எண்ணி அச்சம் அடைந்தனர். காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இந்நிலையில் புதுச்சேரி நகர பகுதியில் உள்ள ரெயின்போ நகர் பகுதி மக்கள், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்கும், குற்றவாளிகளை எளிதாக கண்டுபிடிப்பதற்காக 4 சிசிடிவி கேமராக்களை தங்களது பகுதியில் அமைத்துள்ளனர். இதை கிழக்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் மாறன் திறந்து வைத்து, செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதே போல் அனைத்து மக்களுக்கு சிசிடிவி கேமராக்களை வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்த முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர் வினோத் மற்றும் அப்பகுதி மக்கள் உடனிருந்தனர்.


ஒரே நாளில் ⭐ஜி.வி.பிரகாஷின் 2⃣ திரைப்படங்கள் வெளியாகிறதா ⁉


எம்.எம்.சந்திரமௌலி 🎬இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் - ஷாலினி பாண்டே இணைந்து நடித்துள்ள படம் 🎥'100 சதவீதம் காதல்'. இந்த படம் செப்டம்பர் 6ம் தேதி வெளியாகவுள்ளதாக 📣அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - சித்தார்த் இணைந்து நடித்துள்ள 📽'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படமும் செப்டம்பர் 6ம் 📆தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.