பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதலின்படி மாணவியர் உய்த்தறிஞர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமை கல்லூரி முதல்வர் சுப்ரமணியன் தலைமை தாங்கி துக்கி வைத்தார். இதில் 2019 2020 ஆம் கல்வியாண்டில் சேருகின்ற இளநிலை முதுநிலை முதலாமாண்டு மாணவியர்களுக்கு அறிவுறுத்த வேண்டிய தரவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. மேலும் இக்காலக் கல்விமுறை சுய மேம்பாடு உடல்நலமும் ஓம்புதல் உணர்வுசார் கூறுகள் பற்றியும் விளக்கப்பட்டன. அதுமட்டுமில்லாமல் மாணவியர்கள் கல்லூரிக்கு வந்து செல்லும் போக்குவரத்து சூழல் பெற்றோர்களை போல் மாணவியர்களை பேராசிரியர்கள் பாதுகாப்பு எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பது குறித்தும் பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

No comments:
Post a Comment